10 நிமிடத்தில் பலவகை துவையல்

இந்தப் பதிவில் துவையல் சிறிது நேரத்தில் எப்படி செய்வது இன்று பார்ப்போம் . உதாரணத்திற்கு முதலில் வல்லாரை துவையல் செய்வோம்.



தேவைப்படும் பொருட்கள் :
1.கடுகு ------தேக்கரண்டி
2. உளுந்து------1 மேசைக்கரண்டி
3.பெருங்காயத்தூள்-------1/2 தேக்கரண்டி
4. பூண்டு-----4 பல்
5. பெரிய வெங்காயம்-------எலுமிச்சம்பழம் அளவு
6. மிளகாய் ( பச்சை/ சிவப்பு/ காய்ந்தது )-----2/3
7. புளி------எலுமிச்சம் பழத்தின் பாதி அளவு
8. இஞ்சி-----1 cm
9.  வல்லாரை -----கைப்பிடி அளவு
10. உப்பு---- தேவையான அளவு
11. தேங்காய் பூ----- 35 gram   /   கடலை பருப்பு
12. எண்ணெய்-----1 மேசைக்கரண்டி

படிமுறைகள் :

1. முதலில் கடுகு உளுந்து மற்றும் பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
2. அடுத்தது ஒவ்வொன்றாக பூண்டு , வெங்காயம்,  மிளகாய் மற்றும் இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
3. வல்லாரையை போட்டு வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும்
4. இறுதியாக தேங்காய் பூ சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.

  • தேங்காய் பூ வேண்டாதவர்கள் தாளிக்கும்போது கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
5. அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து விட்டால் துவையல் தயார். 
  • வல்லாரை தவிர சேர்க்கக் கூடியது :
1.கொத்தமல்லி
2. புதினா
3. கறிவேப்பிலை
4. வறுத்த கொள்ளு 
5. தூதுவளை
6. முடக்கத்தான் 
7. பிரண்டை
8. நெல்லிக்காய்

  • கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை இது மூன்றையும் வதக்காமல் இதில் சேர்த்துக் கொள்ளலாம்..

இவ்வாறு பலவகை துவையல் 10  நிமிடத்தில் தயார்.

சிறிது நீர் ஊற்றினால் பலவகை சட்னிகளும் தயார்




                                                                                             இப்படிக்கு,
                                                                                                                   
                                                                                             தெய்வானை கனகசபை













Comments

Popular posts from this blog

புதிய இரும்பு தோசை கல்லை பழக்குவது எப்படி ?

அதிரடி பொடி ( இட்லி , தோசை )